(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று(11) புதன்கிழமை வித்தியாலய அதிபர் மூ.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தரம் 2மாணவர்களால் இவ்வாண்டு புதிதாக இணைக்கப்பட்;ட தரம் 1 மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.
முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று(11) புதன்கிழமை வித்தியாலய அதிபர் சு.அரசரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தரம் 2மாணவர்களால் இவ்வாண்டு புதிதாக இணைக்கப்பட்;ட தரம் 1 மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.
இந்நிகழ்வில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், ஓய்வுபெற்ற கொத்தணி அதிபர் சந்திரசேகரம், முதலைக்குடா மகா வித்தியாலய அதிபர் சி.அகிலேஸ்வரன், மக்கள் வங்கி பிரதிநிதிகள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு சாரதா வித்தியாலயத்தில் தரம் 1மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று(11) புதன்கிழமை வித்தியாலய அதிபர் க.கிருபைராசா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தரம் 2மாணவர்களால் இவ்வாண்டு புதிதாக இணைக்கப்பட்;ட தரம் 1 மாணவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.