வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்தில் தரம்- 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(சசி) கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு புதன்கிழமை 11.01.2017 அன்று அதிபர் சோ.வேதநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

புதிதாக முதலாம் தரத்திற்கு இணைந்த மாணவர்கள் சிறந்த முறையில் வரவேற்கப்பட்டதுடன், இன்றைய நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பெற்றார்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் இப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக்கற்று, முதலாவதாக புலமைப் பரிசில் பரிட்சையிலும் சித்தியடைந்த மாணவரான செல்வன் வெற்றிவேல் கரிகரன் அவர்கள் க.பொ.த உயர்தரப்பரீட்சை –2016 இல் கணிதப் பிரிவில் தோற்றி 2A B சித்தியைப் பெற்றதுடன், மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் 10வது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 841வது இடத்தினையும் பெற்று அதி விசேட உள்ளீர்ப்பு பொறியியல் மாணவராக பல்கலைக்கழகம் நுழையவுள்ளமைக்கு வாழ்த்திக் கெளரவிக்க பட்டிருந்தார்.