பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு-வீடியோ

2017 கல்வியாண்டிற்கு தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் க.தம்பிராசா தலைமையில் இன்று (11) நடைபெற்றது.

இதன்போது தரம் 2 மாணவர்களால் தரம் 1 மாணவர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் புதிதாக பயிற்றுவிக்கப்பட்ட
கனிஷ்ட பாண்டு வாத்தியக் குழுவினர் பாண்டு வாத்தியம் இசைத்து மாணவர்களை வரவேற்று சென்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பட்டிருப்பு வலய கல்வி அலுவலகத்தில் இருந்து வருகைதந்திருந்த சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி.ச.தில்லைநாதன், பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் க.யோகநாதன், பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் கு.நாகேந்திரன், பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.