க.பொ.த உயர்தரப் பரீட்சை -2016 கணிதப்பிரிவில் சிவாநந்தா மாணவன் நா.கிருத்திகன் முதலிடம் பெற்றுச் சாதனை

இன்று அதிகாலை இணையத் தளம் மூலம் வெளிவந்துள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை -2016 பெறுபேறுகளின்படி கணிதப்பிரிவில் தோற்றிய திரு. நாகராஜன் கிருத்திகன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும், பாடசாலை ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

மேலும் பல மாணவர்கள் சிவாநந்தாவிலிருந்து அனைத்துத் துறை சார்பாக தெரிவாகியுள்ளபோதிலும் பெறுபேகள் இறுதியிடப்படாத காரணத்தினால் முழுமையான பெறுபேறுகளை தற்போது செய்திப்படுத்த முடியாமல் உள்ளது. 

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்த மாணவர்கள் மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு மாணவர்களை ஊக்குவித்து வழிப்படுத்திய பாடசாலை ஆசிரியர்கள் , அதிபர் மற்றும் நிர்வாகத்தினர்க்கு சிவாநந்தா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி தெ.சுந்தரேசன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளா பொறியியலாளர் மங்களேஸ்வரன் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.