மட்டுநகர் நாவலடி காயத்திரிபீடத்தின் அறநெறிப் பாடசாலையை அங்குரார்ப்பணம் செய்தல் நிகழ்வு

(கோபி) மட்டக்களப்பு நாவலடி, புதுமுகத்துவாரம் மற்றும் திருச்செந்தூர் பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 1 இல் இருந்து தரம் 10 வரையான 45மாணவர்களுக்கு இன்று காயத்திரி பீடத்தில் காயத்ரி பீட பிரதம குரு சிவஸ்ரீ த.சாம்பசிவ சிவாச்சாரியாரின் தலைமையிலும், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாச்சார இணைப்பாளர் திரு.கே.குணநாயகம், செல்வி.து. சிவதர்சினி, திருமதி சறோஜினி பாலசுந்தரம் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோர்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள், பக்தர்கள், பொது மக்கள் முன்னிலையில் அறநெறிப் பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு காலை 10.00 மணி சுபநேரத்தில் சமயவழிபாட்டுடன் இடம் பெற்றது.