ஊடகவியலாளர்களுக்கான 3 மாத கால இலவச ஆங்கில மொழிப் பயிற்சி நெறி

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  ஊடகவியலாளர்களுக்கான 3 மாத கால இலவச ஆங்கில மொழிப்  பயிற்சி நெறி எதிர்வரும் வியாழக்கிழமை(26)  மாலை 3.30 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா நிறுவகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபானத்தினால் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒத்துழைப்போடு இப்பயிற்சி நெறி நடத்தப்படுகிறது.

பங்கு கொள்பவர்கள் தொடர்ச்சியாக கற்கை நெறியைத் தொடரும் போது மாத்திரமே சான்றிதழ் வழங்கப்படும் என்பதுடன் இதுவரை விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். ஊடகத்துறை ஆர்வமுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.வரதராஜன் தெரிவித்தார்.


இப் பயிற்சி நெறியில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் தங்களது விபரங்கள், மற்றும் ஊடகம் என்பவற்றினைக் குறிப்பிட்டு, செயலாளர், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்,  6/3, பழைய கல்முனை வீதி, மட்டக்களப்பு. என்ற விலாசத்திற்கோ  easternpressclub@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பி வைக்க முடியும்.