திருகோணமலை கந்தளாய் 93 ஆம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவன் உயிரழந்துள்ளான்.
இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வேனொன்று வீதியை விட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் வேனில் பயணித்த ஏனைய 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கந்தளாய் பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4