மாவட்டத்தில் முதலாமிடத்தினையும் , தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினை பெற்ற கல்முனை மாணவன்

 
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை விஞ்ஞானப்பிரிவில் தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினையும், மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இம்முறை மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும், தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினையும் பத்மகைலைநாதன் டிலூஜன் 3 ஏ தர சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இது போன்று ஏனைய மூன்று பிரிவுகளிலும் (காலை, வர்த்தகம், கணிதம்) இம்முறை 3 ஏ தரச்சித்திகளை பெற்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை சதனை படைத்துள்ளதுடன் அனைத்து பிரிவுகளிலும் அதிகூடிய மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது .