சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கிவைப்பு


சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியின் 1200 மாணவர்களுக்கு 300,000 ரூபா பெறுமதியான 6000 அப்பியாசக் கொப்பிகள் திங்கட்கிழமை (16) வழங்கிவைக்கப்பட்டது.

சாணக்கியன் இராசமாணிக்கம் கருத்து தெரிவிக்கையில் தமது அமைப்பினால் 2017 ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளுக்காக 8 மில்லின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் அப்பியாச கொப்பிகளுக்காக 3.2 மில்லியன் நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பட்டிருப்புதொகுதியில் உள்ள 95 வீதமான பாடசாலைகளுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்