கிராம சேவகர் அலேக்சாண்டருக்கு வேப்பையடி முத்தமிழ் விளையாட்டுக் கழகத்தினால் பாராட்டு


(சா.நடனசபேசன்)
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் புலமைப்பரிசில் திட்டத்தில் இந்தியாவிற்குச் சென்று பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்த நாவிதன்வெளி பிரதேசசெயலகப்பிரிவில் உள்ள அன்னமலை 2 கிராமசேவகர் பி.ஐ.அலேக்சாண்டர் அவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை காலை  வேப்பையடி முத்தமிழ்  இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் பல் தேவைக்கட்டிடத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் உள்ள 25 மாவட்டத்தில் இருந்து 25 கிராமசேவகர்கள் இப்பயிற்சிநெறிக்குச் சென்றிருந்தனர் இதில் அம்பாரை மாவட்டத்தில் இருந்து நாவிதன்வெளிப் பிரதேசசெயலகப்பிரிவினைப் பிரதிநிதித்துவப்படுத்தியே கிராமசேவகர் அலேக்சாண்டர் இப்பயிற்சி நெறிக்குத் தெரிவசெய்யப்பட்டு கடந்த 9 ஆம்திகதியில் இருந்து 15 ஆம்திகதி வரை இந்தியாவின் கேரளாவில் உள்ள பல்கலைக்கழத்தில் நிருவாகம் தொடர்பான விஷேட பயிற்சினைப் நிறைவு செய்து வந்துள்ள கிராமசேவைகரைப் பாராட்டி கௌரவித்தனர்
இந்நிகழ்வில் ஆசிரியர் தருமலிங்கம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் யோகராசா மற்றும் ஆலயங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.