கல்லடி ஹரி இல்லச் சிறுவர்களின் சாதனை

கல்லடி ஹரி சிறுவர் இல்லத்திலிருந்து கடந்த வருடம் க.பொ.த(உ/த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 04 பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். இவர்களில் 3 மாணவர்கள் கலைப்பிரிவிலும் 01 மாணவன் வர்த்தகப் பிரிவிலும் தெரிவாகியுள்ளனர். 

செல்வன். ரா.வினோத் (கலைப்பிரிவு) – 3 B
செல்வன் செ.ரவிகரன் (கலைப்பிரிவு) – 2 A, 1 C
செல்வன் ல.அனுஜன் (கலைப்பிரிவு) – 2 B, 1 C
செல்வன் அ.டிலக்சன் (வர்த்தகப் பிரிவு) – 1 A, 2 B

இதற்கு முன்னதாக ஹரி இல்லத்திலிருந்து 05 மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகின்ற அதே வேளை கடந்த வருடம் செல்வன்.ரி.நிலோஜன் பொறியியல் பிரிவிற்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பல சிரமங்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட பின் தங்கிய பிரதேசங்களில் இருந்து ஹரி இல்லத்தில் இணைந்து இல்லத்தின் சிறப்பான வழகாட்டலின் மூலம் மேற்படி மாணவர்கள் சாதனை படைத்தது பாராட்டப்பட வேண்டியதாகும்.