அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசத்திற்கு அனந்தி சசிகரன் விஜயம்


(சா.நடனசபேசன்)

 வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிகரன் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார்  இந்நிகழ்வுகளில் ஒன்றான சவளக்கடை சது/கணேஷா வித்தியாலயத்தில் 85 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் புத்தகப்பைகளும் வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வு பாடசாலை அதிபர் பொன்.பாரதிதாசன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின்(கி.மா) பணிப்பாளர் கி.ஜெயசிறில் ,    ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தங்களது பாடசாலையின் நலனைக் கருத்தில் கொண்டு புத்தகப் பைகளை வழங்கிய வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி மற்றும்ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின்(கி.மா) பணிப்பாளர் கி.ஜெயசிறில் உட்பட அனைவருக்கும் பாடசாலையின் அதிபர் பொன்.பாரதிதாசன் நன்றிதெரிவித்துள்ளார்.