மண்டூரில் கோர விபத்து...! இருவர் பலி

(ஷமி.மண்டூர்) வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பாலமுனை சந்தியில் உள்ள முடிவெட்டும் கடைக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக சென்று மோதியதன் காரணமாக இருவர் படுகாயமடைந்த நிலையில் மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மற்றைய நபர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.
மண்டூர் பாலமுனையை சேர்ந்த கோ.கஜேந்திரன் (19வயது)இ எஸ்.அதிரதன் (19வயது) ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.