நாளை தொடக்கம் காலநிலையில் மாற்றம்

நாளை (20) தொடக்கம் குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில், மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதைய குளிரான காலநிலையில் மாற்றம் ஏற்படக் கூடுமென திணைக்களம் விடுத்த வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் தென்மாகாணங்களின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மாகாணங்களில் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.