(சுபஜன், சசி)
கல்குடா கல்வி வலயத்தின், ஏறாவூர் பற்று - 2 கோட்டத்தில் அமைந்துள்ள மட்/செங்கலடி விவேகானந்தர் வித்தியாலயத்தின் - 2017ம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வும் பாடசாலை முதல்வர் திரு கி.சிவலிங்கராஜா தலைமையில் இன்று (23) பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு.கே.சிவலிங்கராஜா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசவம் வியாழேந்திரன் கலந்துகொண்டிருந்தார். மற்றும் கல்குடா கல்விவலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி மற்றும் பல அதிதிகள் இன்றைய விளையாட்டுபோட்டியில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கங்கை இல்லம் சிவப்பு முதலாம் இடத்தினையும் ஜமுனை இல்லம் மஞ்சள் இரண்டாம் இடத்தினையும், மூன்றாம் இடத்தினை காவேரி இல்லம் பச்சையும் பெற்றன.
விளையாட்டு நிகழ்வில் உடற்பயிற்சி கண்காட்சி, அணி நடை, உடல் இயக்கத்திறன் வரவேற்பு நடனம், மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டு, பெற்றோர், பழைய மாணவர், மற்றும் ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சிகள் என்பன சிறப்பாக நடை பெற்றது. நிகழ்வின் முடிவில் அதிதிகளினால் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும், வெற்றி கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கல்குடா கல்வி வலயத்தின், ஏறாவூர் பற்று - 2 கோட்டத்தில் அமைந்துள்ள மட்/செங்கலடி விவேகானந்தர் வித்தியாலயத்தின் - 2017ம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வும் பாடசாலை முதல்வர் திரு கி.சிவலிங்கராஜா தலைமையில் இன்று (23) பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு.கே.சிவலிங்கராஜா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசவம் வியாழேந்திரன் கலந்துகொண்டிருந்தார். மற்றும் கல்குடா கல்விவலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி மற்றும் பல அதிதிகள் இன்றைய விளையாட்டுபோட்டியில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கங்கை இல்லம் சிவப்பு முதலாம் இடத்தினையும் ஜமுனை இல்லம் மஞ்சள் இரண்டாம் இடத்தினையும், மூன்றாம் இடத்தினை காவேரி இல்லம் பச்சையும் பெற்றன.
விளையாட்டு நிகழ்வில் உடற்பயிற்சி கண்காட்சி, அணி நடை, உடல் இயக்கத்திறன் வரவேற்பு நடனம், மற்றும் மாணவர்களுக்கான விளையாட்டு, பெற்றோர், பழைய மாணவர், மற்றும் ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சிகள் என்பன சிறப்பாக நடை பெற்றது. நிகழ்வின் முடிவில் அதிதிகளினால் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும், வெற்றி கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.