(சிவம்)
தமிழர்களின் கலை, கலாசார, இலக்கிய மரபுரிமை மற்றும் அரசியில் அபிலாசைகளை வெளிப்படுத்தும் நான்காவது பொங்கல் விழாவிற்கான விளம்பரப் பதாதைகள் மட்டக்களப்பு நகரின் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களில் கட்டப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று வியாழக்கிழமை (19) ஏற்பாடு செய்யப்பட்டள்ள இந்நிகழ்வின் பதாதைகள் நகர மணிக்கூட்டுக் கோபுரம், பிள்ளையாரடி, கிழக்கு பல்கலைக் கழக மருத்துவ பீடம் அருகில், மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபம் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.