மாடுகளைத் திருடி விற்பனை செய்த இருவர் விளக்கமறியலில்.

(எப்.முபாரக்)    

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்து மாடுகளை திருடி விற்பனை செய்த இருவரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை(22) உத்தரவிட்டார் .                              

கந்தளாய், மற்றும் வான்எல பகுதியைச் சேர்ந்த 42,மற்றும் 45 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.                    

 குறித்த சந்தேக நபர்கள் மாட்டு தொழுவத்தில் உள்ள மாடுகளை திருடி விற்பனை செய்துள்ளதாக மாட்டு உரிமையாளரினால் சந்தேக நபர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே குறித்த சந்தேக நபரை சனிக்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.      


சந்தேக நபர்களை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.                              

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.