மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் பாரம்பரிய பொங்கலிற்கான அரிசிடும் நிகழ்வு


(சிவம்)

தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் பாரம்பரிய பொங்கல் விழாவை முன்னிட்டு கலைப் பொங்கலுக்காக பால்பொங்கி வழியும் பானையில் அரிசிடும் நிகழ்வு இன்று (19) அரசடி தேவநாயகம் மண்டப வளாகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு தமிழ்த்  தேசியக் கூட்டமைபின் 4 ஆவது பொங்கல் விழாவையொட்டிய் இந்நிகழ்வில்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி. துரைராசசிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரருமான பொன் செல்வராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கலந்து கொண்டு பொங்கலிற்கான அரிசிடும் மங்கல நிகழ்வில் கலந்து கொண்டனர்.