மட்டக்களப்பு நகரில் இந்துக்கள் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தயாரான நிலையில்


(சிவம்)
சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நோக்கோடு இந்துக்கள் நாளை சனிக்கிழமை (14) பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக இன்று (13) மட்டக்களப்பு நகரில் பொங்கல் பொருட்கள் மற்றும் புத்தாடைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர்.
நகரில் உள்ள உடுப்புக் கடைகள், மாநகர சந்தை வளாகத்தில் உள்ள கடைகளில் பாரம்பரிய முறையில் களி மண்ணினால் செய்யப்பட்ட புத்தம் புதிய பானை, அகப்பை, மங்கலப் பொருட்களான கரும்பு, மஞ்சள், இஞ்சி, பழங்கள், பட்டாசுகள் மற்றும் மத்தாப்புக்கள் என்பனவற்றைக் கொள்வனவு செய்தனர்.