சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவர் கைது

அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனைப்   பிரதேசங்களில் தங்களின் வீடுகளுக்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் இருவரை ஞாயிற்றுக்கிழமை (22) மாலை  கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையின் கொழும்பு தலைமைக் காரியாலய புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.



இதன்போது, இவர்களின் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மின்மானிகளில் குளறுபடி செய்து சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.