இடை நிறுத்தப்பட்டுள்ள விரிவுரைகளை மீண்டும் ஆரம்பிக்க கோரி வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்

(சுபஜன்)
கிழக்கு பல்கலைகழகத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள விரிவுரைகளை மீண்டும் ஆரம்பிக்க கோரி, பல்கலைக்கழத்தின் பிரதான  வயிலுக்கு முன்னால் இன்றையதினம் (23) ஒன்றுகூடிய மாணவர்கள்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைகழக மாணவர்களின் விடுதி உரிமைப் போராட்டம் காரணமாகப் பல்கலைகழகத்தில் விரிவுரைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளனன. முன்னதாக கடந்த சனிக்கிழமை, மாணவர்கள் அனைவரையும் பல்கலைகழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் வெளியேற விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு, சனிக்கிழமை காலை 8.00 மணியுடன் முடிவடைந்த போதிலும் தொடர்ந்தும் மாணவர்கள் நிர்வாகக் கட்டடத்தில் தங்கியுள்ளனர். விடுதி வசதியுடள் மீண்டும் விரிவுரை ஆரம்பிக்கக் கோரி இன்று நண்பகல் நிர்வாக கட்டடத் தொகுதியிலிருந்து பேரணியாகப் புறப்பட்ட மாணவர்கள் வந்தாறுமூலை பிரதான வாயிலை சென்றடைந்து, தங்கள் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் வாசக அட்டைகளை ஏந்தியவாறு, கோசங்களை எழுப்பினார்கள்.