தந்தையை இழந்து வறுமையில் க.பொ.த.உயர்தர பரீட்சையில் மாவட்டத்தில் நான்காம் இடம்!.

 (யுதர்சினி)
இன்று(7) இணையத்தளம் மூலம் வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை(2016) பெறுபேறுகளின் படி கலைப்பிரிவில் தோன்றிய கல்குடா வலய வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவன் ஸ்ரீமோகன். ஸ்ரீலக்சன் மூன்று ஏ தர சித்திகளை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காம் இடத்தை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

 தந்தையை இழந்தும் வறிய நிலையில் தாய் மற்றும் சகோதரர்களின் விடாமுயற்சியாலும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பாலும் இச்சாதனையை நிகழ்த்தி தனது குடும்பத்திற்கும் தனது கல்வி சமூகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கும் பெருமையை சேர்த்திருப்பதாகவும் அதற்காக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாகவும் வாழைச்சேனை இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க உபதலைவர் வ.பிரியராஜ் தெரிவித்தார். இம் மாணவனின் தாயார் வே.உமாதேவி எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில்.


 எனது கணவர் மகன் ஐந்தாம் தரம் கல்வி பயிலும் போதே கடந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இறந்து விட்டார் அதனால் எனது மகனை படிப்பிப்பதற்காக பெரும் கஷ்டப்பட்டேன் எனது மகனின் இச்சாதனையை காண்பதற்கு எனது கணவர்(ஸ்ரீமோகன்) இப்போது இல்லையே என மன வேதனையுடன் கண்ணீர் மல்க தெரிவித்தார்.