மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாணவி கிரிதரன் வக்சலா முதன் முதலாக மருத்துவ பீடத்திற்கு தெரிவு


(சிவம்)

அண்மையில் வெளியாகிய க.பொ.த. (உயர்தரம்) - 2016 பரீட்சையின் பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாணவி கிரிதரன் வக்சலா விஞ்ஞானப் பிரிவில் 2 A மற்றும் 1 B சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 25 ஆவது இடத்தைப் பெற்று முதன் முதலாக மருத்துவ பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த 2015 இல் நடைபெற்ற க.பொ.த. (சாதாரணம்) பரீட்சையில் 8 A மற்றும் 1 C தரத்திலான சித்திகளைப் பெற்றுள்ளார்.

மேலும் 2012 இல் நடைபெற்ற சுகாதார மேம்பாட்டு பொது அறிவு வினா விடைப் போட்டி மற்றும் சமூக விஞ்ஞான போட்டியில் மாகாண மட்டத்தில் 3 ஆம் இடத்தைப் பெற்றுள்ளதோடு 2013 இல் இடம்பெற்ற CHOGM 22 ஆவது நிகழ்வு கட்டுரைப் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை கற்றுள்ளார்.

 மகாஜனக் கல்லூரி  1875 ஆம் ஆண்டு அரசடி மெதடிஸ் மிசன் பாடசாலையாக தோற்றம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.