தைப்பொங்கலை முன்னிட்டு சமூர்த்தி நிவாரண கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு

(படுவான் பாலகன்) இந்து மக்களினால் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகை எதிர்வரும் 14ம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சமூர்த்தி பயனாளிகளுக்கான சமூர்த்தி நிவாரண கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. 

கொக்கட்டிச்சோலை வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி தனது பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளையும் வழங்கி வருகின்றதாக அதன் முகாமையாளர் குறிப்பிட்டார்.


நாளாந்தம் 200க்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.