உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் இருவருட பூர்த்தி நிகழ்வுகள்

(இ.சுதாகரன்)

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இருவருடங்கள் முடிவடைந்து மூன்றாவது ஆண்டில் காலடி பதிக்கும் நிகழ்வுகள்  சகல திணைக்களங்களிலும் தேசியக் கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம் இசைத்தல் நல்லாட்சியின் வெளித் தோற்றம்நல்லாட்சியினால் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் பலராலும் பரவலாக பேசப்பட்டன.இதன் இரண்டாவது கட்ட நிகழ்வுகள் நேற்று  (09) நாட்டின் சகல பாடசாலைகளிலும் காலை ஒன்று கூடலின் போது மிகவும் சிறப்பான முறையில் தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது.


நல்லாட்சி அரசாங்கத்தின் இருவருட பூர்த்தி நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் பிரதி அதிபர் கே.கருணாகரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றதுடன் நல்லாட்சி தொடர்பான உரைகளும் இடம்பெற்றன.