ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய 'பேண்தகு அபிவிருத்தி திட்டம்.'


கடந்த 2017.01.19 வியாழக் கிழமை அன்று நாடு பூராவும் நடைமுறைப்படுத்தப்பட்ட 'பேண்தகு அபிவிருத்தித் திட்டம்' சார்பான செயற்பாடுகள் மட். ஆரையம்பதி இராமகிருஷ்ண  மிஷன் மகா வித்தியாலய ஆசிரியர், மாணவர்களாலும் இணைந்து முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில் பாடசாலை சுகாதாரக் கழகம், சுற்றாடற் கழகம், போதைப் பொருள் பாவனைத் தடுப்புக் கழகம் மற்றும் சிறுவர் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் என்பன ஒன்றிணைந்து இவை தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றினை வித்தியாலய அதிபர் திரு.சு.வன்னியசிங்கம் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் நடாத்தியிருந்தனர்.


இவ் விழிப்புணர்வு ஊர்வலமானது வித்தியாலயத்திலிருந்து ஆரம்பித்து ஆரையம்பதி பிரதான வீதியூடாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வானது மாணவர்களுக்கு மட்டுமன்றி பெற்றோரிடையேயும் ஒரு பயனுள்ள நிகழ்வாக அமைந்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.