கல்முனை - யாழ்ப்பாணம் பஸ் மீது தாக்குதல்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் மீது, இருபாலை சந்திக்கு அருகில் வைத்து, செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்; மீது, இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.



குறித்த தாக்குதல் சம்பவத்தின்போது, பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சேதமாகியுள்ளதோடு, பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து,
பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் -