பஸ் மிதிபலகையில் பயணித்த நபர் கீழே விழுந்து பலி



மட்டக்களப்பு - பொலன்னறுவை இடையே பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பஸ்ஸின் முன்பக்க மிதிபலகையில் பயணித்த ஒருவர்  விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த குறித்த நபர் வெலிக்கந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிகந்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.