இளம் குடும்பப் பெண்ணைக்காணவில்லை
மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த சுஜிதா தவசீலன்(35) என்ற இளம் குடும்பப்பெண்ணை கடந்த இரண்டு தினங்களாகக் காணவில்லை என மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சென்று விட்டு வீடு செல்வதற்காக பஸ் வண்டிக்காகக் காத்திருந்தவரே காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மாலை 6 மணியளவில் வைத்திய சாலையில் இருந்து வெளியே வந்தவருடைய தொலைபேசி வியாழக்கிழமை இரவு 8 மணிவரையில் இயங்கியதாகவும் அதன் பின்னர் இயங்கவில்லை என்றும் குடும்பத்தினார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த சுஜிதா தவசீலன்(35) என்ற இளம் குடும்பப்பெண்ணை கடந்த இரண்டு தினங்களாகக் காணவில்லை என மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சென்று விட்டு வீடு செல்வதற்காக பஸ் வண்டிக்காகக் காத்திருந்தவரே காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மாலை 6 மணியளவில் வைத்திய சாலையில் இருந்து வெளியே வந்தவருடைய தொலைபேசி வியாழக்கிழமை இரவு 8 மணிவரையில் இயங்கியதாகவும் அதன் பின்னர் இயங்கவில்லை என்றும் குடும்பத்தினார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.