கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை (13) விடுமுறை


கிழக்கு மாகாணத்திலுள்ள  தேசிய பாடசாலைகள்  தவிர்ந்த ஏனைய மாகாண பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை வழங்குவதுடன், இந்த விடுமுறை தினத்துக்கு பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை (21) பாடசாலைகளை நடத்தப்படும்.

வியாழக்கிழமை போயாதின விடுமுறை வெள்ளிக்கிழமை வேலைநாள் பின்னர் மீண்டும் சனிக்கிழமை (தைப்பொங்கல்) மற்றும் ஞாயிறு விடுமுறை வருகின்றது. இதனால் இந்துக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தைக் கருத்திற்கொண்டு பல்வேறு தரப்பினரும் விடுத்த வேண்டுகோளையடுத்து மாகாணக் கல்வியமைச்சு விஷேட விடுமுறை தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது.