மோட்டார் சைக்கிளைத் திருடி மறைத்து வைத்திருந்த நபர் கைது

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் மைலம்பாவெளியில் மோட்டார் சைக்கிளைத் திருடி மறைத்து வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்த திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


ஏறாவூர் 4 ஆம் குறிச்சியிலுள்ள வீடொன்றின் முன்வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை குறித்த நபர், வீட்டு மதிலால் ஏறிப்பாய்ந்து வளவுக்குள் நுழைந்து திருடிச் சென்று மைலம்பாவெளியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைத்துள்ளார்.

இந்த விடயமாக தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, தாம் விரைந்து செயற்பட்டு, ஒரு சில மணிநேரத்தில் மோட்டார் சைக்கிளையும் சந்தேக நபரையும் கைதுசெய்ததாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேற்படி சந்தேக நபர், ஏறாவூர் 5 ஆம் குறிச்சியைச் சேர்ந்த  நபர் ஏற்கெனவேயும் மோட்டார் சைக்கிள் திருட்டு உட்பட பல திருட்டு சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முகம்கொடுத்து வருபவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.



இந்தச் சம்பவம் குறித்து எறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.