கிழக்கு மாகாண விஸ்வகர்மா சம்மேளனத்தினால் இருபார்வைக் குறைபாடுடையவர்களுக்கான மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு



(சிவம் )

கொழும்பு பட்டக்கண் பவுண்டேசன் அனுசரணையில் கிழக்கு மாகாண விஸ்வகர்மா சம்மேளனத்தினால் இருபார்வைக் குறைபாடுடையவர்கள் அறுபது பேருக்கான மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு  இன்று (26) கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலய விஸ்வகர்ம மண்டபத்தில் நடைபெற்றது.

சம்மேளனத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

கல்லடி இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம் மற்றும் கோட்டைமுனை கிராசேவை உத்தியோகத்தர் எஸ். விமலசிறி, கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் எஸ். சிவலிங்கம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி, கலை, கலாசார, ஆன்மீக , கைத்தொழில்  மற்றும் அபிவிருத்திகள் உள்ளிட்ட தினகரனின்  ஆவணப்பதிப்பையும் இலவசமாக வழங்கி வைத்தனர்.