(சா.நடனசபேசன்)
இலங்கை நிருவாகசேவையில் 22 வருடம் உள்ளடங்களாக அரசசேவையில் 31 வருடம் சேவையாற்றி பதவி உயர்வுபெற்று இலங்கை நிதியமைச்சின் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ள களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலாளர் மு.கோபாலரெத்தினம் அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு துறைநீலாவணையில் 26 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை துறைநீலாவணை தெற்கு 1 பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு துறைநீலாவணை தெற்கு 1 கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் ரி.தயாளன் தலைமையில் நடைபெற்றநிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி .ந.புள்ளநாயகம் உதவிப் பிரதேசசெயலாளர் என்.நவநீதராசா உட்பட கிராமத்தில் உள்ள பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வினை சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராசா அவர்கள் தொகுத்து வழங்கியதுடன் கிராமசேவகர் இ.விஜிதரன் நன்றியுரை நிகழ்த்தினார்.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4