குடும்பஸ்தர் ஒருவர் கல்லில் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வாகரைப் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட அம்பந்தாவெளி கிராசேவகர் பிரிவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) காணாமல் போனதாக கூறப்பட்ட குடும்பஸ்தர், உயிரிழந்த நிலையில், பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவருடைய சடலம், நேற்று (24) மாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. அம்பந்தாம்வெளி கிராம அபிவிருத்திச் சங்க செயலராகிய விநாயகமூர்த்தி பிரேமகாந்த (வயது (29) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே,  கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது  தொடர்பாக வாகரைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


குறித்த நபர் காணாமல் போயிருந்தாக தெரிவித்து, உயிரிழந்தவரின் பெற்றோர்களினால், வாகரைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு 6 நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே, இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.