காத்தான்குடி ஹோட்டல் ஒன்றின் உணவில் பல்லி ! ஹோட்டலை மூடுமாறு உத்தரவு

காத்தான்குடி நகர சபைப் பிரிவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உணவுக்குள் பல்லி காணப்பட்டதைத் தொடர்ந்து அக்ஹோட்டலை மூடியுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, டொக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார். 

இது தொடர்பில்  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு திங்கட்கிழமை (27) முறைப்பாடு கிடைத்தது.  இதனை அடுத்து, பொதுச் சுகாதாரப்  பரிசோதகர்கள் அக்ஹோட்டலில் சோதனை செய்ததுடன், விசாரணையும் மேற்கொண்டனர். 

இந்நிலையில், மேற்படி ஹோட்டலை மூடுமாறு உத்தரவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.