மண்டூரில் சமூக சேவை உத்தியோகத்தரான மதிதயன் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இதுவரை இன்னும் ஒருவரை கூட நீதிமன்றத்திற்கு பொலிசார் கொண்டுவரவில்லை , ஒருவரை கூட கைதுசெய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் பாரளமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார் .
நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்தில் சமூகசேவை உத்தியோகத்தராக சேவை புரிந்தவர் மண்டூர் 1 ஐ சேர்ந்த சச்சிதானந்தம் மதிதயன் ( 43 வயது )
கடந்த 26.05.2015 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி கடந்த நிலையில் மண்டூரில் உள்ள மதிதயன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளார்கள். ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்துள்ள நிலையில் மற்றையவர் கையில் தலைக்கவசம் இருந்துள்ளது.
இதனை மதிதயனின் மனைவி அவதானித்துள்ள போதும் தனது கணவர் அலுவலகம் செல்லாததால் அவரின் சேவையொன்றை நாடி எவரேனும் வந்திருக்கலாம் என எண்ணி வந்தவர்களை நோட்டமிடாது சமையலறைக்கு சென்று தேநீர் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் மனைவி தேநீர் தயாரிக்கும் போது மதிதயனும் மோட்டார் சைக்கிளில் வந்தோரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை மதிதயனின் மனைவியால் முழுதாக கேட்கவோ அல்லது அனுமானிக்கவோ முடியா விட்டாலும் “அப்படி செய்ய முடியாது” போன்ற சில வார்த்தைகளை மதிதயன் கூறுவது மனைவி காதுகளில் விழுந்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்நிலையிலே சில நிமிடங்களில் மதிதயனுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
மதிதயனை 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கியின் இரு சன்னங்கள் பதம் பார்த்துள்ளதுடன் வெற்றுத்தோட்டாக்களையும் சந்தேக நபர்கள் பொறுக்கி தடயமற்ற நிலையில் தம்முடனேயே எடுத்து சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மதிதயனின் தலையின் பின்புறமாக இரு துப்பாக்கி குண்டுகளும் பாய்ந்துள்ளன.
இந்நிலையிலேயே சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து ஓடி வந்துள்ள மனைவி கணவனான மதிதயன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு கதறி அழ முழு மண்டூரும் மதிதயனின் வீட்டில் கூடியது.
இச் சம்பவம் நடைபெற்று இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை .
நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்தில் சமூகசேவை உத்தியோகத்தராக சேவை புரிந்தவர் மண்டூர் 1 ஐ சேர்ந்த சச்சிதானந்தம் மதிதயன் ( 43 வயது )
கடந்த 26.05.2015 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி கடந்த நிலையில் மண்டூரில் உள்ள மதிதயன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் இருவர் வந்துள்ளார்கள். ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்துள்ள நிலையில் மற்றையவர் கையில் தலைக்கவசம் இருந்துள்ளது.
இதனை மதிதயனின் மனைவி அவதானித்துள்ள போதும் தனது கணவர் அலுவலகம் செல்லாததால் அவரின் சேவையொன்றை நாடி எவரேனும் வந்திருக்கலாம் என எண்ணி வந்தவர்களை நோட்டமிடாது சமையலறைக்கு சென்று தேநீர் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் மனைவி தேநீர் தயாரிக்கும் போது மதிதயனும் மோட்டார் சைக்கிளில் வந்தோரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை மதிதயனின் மனைவியால் முழுதாக கேட்கவோ அல்லது அனுமானிக்கவோ முடியா விட்டாலும் “அப்படி செய்ய முடியாது” போன்ற சில வார்த்தைகளை மதிதயன் கூறுவது மனைவி காதுகளில் விழுந்துள்ளதாக அறிய முடிகின்றது.
இந்நிலையிலே சில நிமிடங்களில் மதிதயனுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
மதிதயனை 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கியின் இரு சன்னங்கள் பதம் பார்த்துள்ளதுடன் வெற்றுத்தோட்டாக்களையும் சந்தேக நபர்கள் பொறுக்கி தடயமற்ற நிலையில் தம்முடனேயே எடுத்து சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. மதிதயனின் தலையின் பின்புறமாக இரு துப்பாக்கி குண்டுகளும் பாய்ந்துள்ளன.
இந்நிலையிலேயே சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து ஓடி வந்துள்ள மனைவி கணவனான மதிதயன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு கதறி அழ முழு மண்டூரும் மதிதயனின் வீட்டில் கூடியது.
இச் சம்பவம் நடைபெற்று இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை .