மட்டக்களப்பு துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தினைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தினைக் கண்டித்து யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக அரச அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.



யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உதவி அரசாங்க அதிபர், சமுர்த்தி ஆணையாளர், நிர்வாக அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

‘குற்றவாளிகள் தண்டிக்கப்படல் வேண்டும்’,  ‘நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’,  ‘அரச அதிகாரிகளை சுதந்திரமாக செயற்பட விடுங்கள்’ போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.