சத்திர சிகிச்சையின் பின்னர், வைத்தியர் நோயாளியுடன் ஒரு மணித்தியாலத்தை செலவிடவேண்டும்

சத்திர சிகிச்சையின் பின்னர், வைத்தியர் நோயாளியுடன் ஒரு மணித்தியாலத்தை செலவிடவேண்டும் என்று சுகாதார போஷாக்கு       மற்றும்  சுதேச மருத்துவ துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எத்தகைய தனியார் வைத்தியசாலைகளிலும் நோயாளர்கள் தொடர்பான வைத்திய பரிசோதனைகளின் போது வைத்தியர் ஒருவர் நோயாளியை 10 நிமிடங்கள் பரிசோதனை செய்ய வேண்டும். தற்போது இந்த சட்டம் நடைமுறையில் உண்டு. நோயாளரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத தொகையே அறவிடப்படவேண்டும். விசேடமாக அரச விசேட வைத்திய நிபுணர்களுக்காக இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.



இதன் அடிப்படையில் நோயாளர்களின் உரிமை மற்றும் வைத்தியர்களின் சேவை தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, நோயாளர்களின் உரிமைக்காக எதிர்காலத்தில் மேலும் பல சட்டங்களைக் கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
எதிர்வரும் ஜுலை மாதத்தில் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுமக்கள் நலன் தொடர்பான சர்வதேச கண்காட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைப்பதற்காக சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் உரையாற்றுகையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஆயுர்வேத கண்காட்சி மற்றும் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது இதற்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. தொற்றா நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கொழும்பு, உப்பு மற்றும் சீனி ஆகியவற்றைக்கொண்ட உணவு வகைகளுக்கு கூடுதலான வரிiயை விதிப்பதற்கான பிரேரணை விரைவில் சமர்ப்பிக்கப்படுமென்றும் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.