சாரதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து போலீசார்

இன்று எல்லா சாலை முழுவதும் போக்குவரத்து போலீசார் கடமையில் உள்ளதை காணக்கூடியதாக இருக்கும் ஆனாலும் கடமையை சரிவர செய்கிறார்களா இல்லாயா என்பதில் இன்றும் சந்தேகங்களே மக்கள் மத்தியில் நிலவுகின்றன.

ஏற்கனவே இவர்கள் தொடர்பாக பல கருத்து முரண்பாடுகள் இருக்கின்ற போதிலும் இன்று பெப்ரவரி மாதத்தில் 2017 ம் ஆண்டு தண்டப்பணம் செலுத்த தவறுபவவர்களுக்கு இம்மாதம் 29 ம் திகதி 30 ம் திகதியில் நீதிமன்ற திகதி இடப்பட்ட தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போக்குவரத்து போலீசார் வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டு காணப்படுகிறது. ஒரு சிறு தவறு விட்டாலே தண்டிக்கும் இவர்கள் பாராபட்சமாக எழுந்தமானமாக இவ்வாறு திகதி இடுவது மட்டும் சரியாக படுமா என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்