பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு நிகழ்வு

(கதிரவன் )

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மேலும் 104 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்கி உள்ளது.

திருகோணமலை உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் இன்று  ஞாயிற்றுக்கிழமை    இவை வழங்கி வைக்கப்பட்டது.


கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் க.துரைராஜசிங்கம் ஆகியோர் இதனை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் அன்வர் றம்ழான் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் ஞா.தெய்வேந்திரம், ஆகியோரும் கலந்து கொண்டர்.

23 விஞ்ஞானம், 07 கணிதம், 74 ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

2017.03.20 ம் திகதி தொடக்கம் இவர்கள் பாடசாலைகளுக்கு சென்று கடமைகளை  பொறுப்பேற்க வேண்டும்.
 இரண்டு வாரங்களுக்குள் பாடசாலைகளில் நியமனத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களின் நியமனங்கள் வறிதாக்கப்படும் என அங்கு தெரிவிக்கப்பட்டது.