மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள மட்/மமே/பாலர்சேனை கலாசூரி வினாயகமூர்த்தி வித்தியாலயத்திலயத்திற்கு "உறவுகளைச் காப்போம்" நிறுவனத்தினால் இன்று 21.03.2017 கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இதபோது தரம் - 3, தரம் - 4 மாணவர்களுக்கு செயல் நூல்களும், தரம் 1,2 மாணவர்களுக்கு கற்றல் உபகரணப் பொதிகளும் மற்றும் கரும்பலகையும் வழங்கப்பட்டது.
இன்நிகழ்வில் "உறவுகளைக் காப்போம்" நிறுவனத்தின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேற்படி பாலர்சேனை பாடசாலை மட்டக்களப்பு நகரின் மேற்கே வெகு தொலைவில் அமைந்துள்ள அதி கஸ்ட பிரதேசங்களில் ஒன்றாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.