டெங்குநோயின் தாக்கம் சிகிட்சை பலனின்றி இளைஞன் பரிதாப மரணம்


(சிவம்)
பாண்டிருப்பு -2 ஆம் குறிச்சியைச் சேர்ந்த வள்ளியப்பன் நிலக்ஷன் (நிலா) வயது (23) டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  தீவிர சத்திர   சிகிசைப் பிரிவில் சிகிட்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை (15) மரணமானார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக மயங்கி விழுந்த  வேளையில் தலையில் பலமாக அடிபட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தநிலையில் உயிரிழந்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறித்த பிரிவிற்கான சத்திர சிகிட்சை வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட வைத்தியர்கள், தாதியர்கள் யாபேரும் தீவிர பிரயத்தனம் எடுத்துவந்த நிலையில் குறித்த இளைஞன் பரிதாபகரமாக மரணமடைந்தார்.

இவர் கல்முனை செங்கடகல நிதி  (பினான்ஸ்) நிறுவனத்தில் கடமை புரிந்து வந்த இவரின் மரணம் கல்முனைப் பிரதேசத்தை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை  (17) மாலை 4.00 மணிக்கு பாண்டிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.