மகளின் வீட்டில் இருக்கும்போது நண்பகல் 12.00 மணியளவில் மற்றைய மகள் ரஞ்சிதா கோல் எடுத்து 'அண்ணாச்சி தூக்குப் போட்டு செத்துவிட்டான்' என்றாள். உடனே நானும் கணவரும் அங்கு சென்றபோது மகனை தாண்டியடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக சொன்னார்கள்.
இவ்வாறு குறிஞ்சாமுனையைச் சேர்ந்த தா.தச்சிதானந்தம் (வயது 20) என்பவரின் மரண விசாரணையில் சாட்சியமளித்த அவரின் தாயாரான சிவலெட்சுமி கூறினார். காத்தான்குடி வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ச.கணேசதாஸினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட விசாரணையில் சாட்சி மேலும் கூறியதாவது;
"எனது மூத்த மகனை இனம் தெரியாதவர்கள் கடத்திச் சென்று பத்து வருடங்களாகின்றன. இரண்டாவது மகன் குடும்பப் பிணக்கு காரணமாக ஒரு வருடத்துக்கு முன்னர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான். ஒரு மகன் திருமணம் செய்துவிட்டான். கடைசி மூன்று பேரும் படிக்கிறார்கள்.
2016 ஆம் ஆண்டு ஆவணி மாதம் எனது கணவரின் அண்ணனின் மகள் மனோகரி அவருடைய அப்பா அம்மாவுடன் சண்டை பிடித்துவிட்டு வெளிநாடு செல்வதற்காக எமது வீட்டுக்கு வந்தாள். பின்னர் மரணமான எனது மகனையும் இவளையும் சேர்த்து பிழையாக ஊரில் கதை பரவத்தொடங்கியது. இப்படி ஊரெல்லாம் கதைக்கிறார்களே என்று மனோகரியிடம் கேட்டேன். அதற்கு அவர் சித்தி தச்சு எனது தம்பி. எங்களுக்குள் எந்த தப்பான எண்ணங்களும் இல்லை என்று சொன்னாள். நீ இனிமேல் எங்கள் வீட்டுக்கு வரவேண்டாம். வெளிநாடு போய்விட்டு வந்து உங்கட வீட்டுக்கே சென்று விடு என்று நான் சொல்லி அவளை அனுப்பிவிட்டோம்.
ஒன்றரை மாதங்களில் நாடு திரும்பி எங்கள் வீட்டுக்கே வந்தாள். உன்னையும் மகன் தச்சுவையும் பற்றி ஊரெல்லாம் பிழையாகக் கதைக்கிறார்கள். நீ வரவேண்டாம் என்று சொன்னபின் அவள் வருவதில்லை. ஆனால் மகனும் மனோகரியும் போனில் கதைப்பது தெரிந்தது. இருவருக்குமிடையே தகாத உறவு இருப்பதும் தெரியவந்தது.
மகனுக்கும் புத்திமதி சொன்னோம். எனது கணவரும் மகனும் உன்னிச்சையில் வாடியில் இருந்தனர். இடையிடையே வந்து சாமான் எடுத்துச் செல்வார்கள். இப்படியான நிலையில்தான் மகள் ரஞ்சிதா கோல் எடுத்து அண்ணாச்சி செத்துவிட்டான்" என்று சொன்னாள் என்றாள். இதேவேளை மரணமானதை அறிந்த எனது மகளும் தூக்கில் தொங்கி மரணமானாள் என இலுப்படிச்சேனை என்னும் இடத்தைச் சேர்ந்த பா.மனோகரி (வயது 27) என்பவரின் மரண விசாரணையில் சாட்சியமளித்த அவரின் தாயாரான மு.பூரணம்மா கூறினார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காத்தான்குடி வடக்கு திடீர் மரணவிசாரணை அதிகாரி ச.கணேசதாஸ் நடத்திய விசாரணையில் சாட்சி மேலும் கூறியதாவது;
"எங்களுக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள் மூன்று மகன்களும் ஒரு மகளும் திருமணம் செய்துவிட்டனர். இறந்த எனது மகள் இரண்டு தடவைகள் வெளிநாடு சென்று இரண்டு வருடங்கள் தொழில் செய்து விட்டு வந்தாள். கடைசியாக வெளிநாடு சென்றபின் எனது கணவரின் தம்பியின் மகன் தொலைபேசி மூலம் அவருடன் தொடர்பு கொண்டு வரச்சொன்னான். அதனால் ஒன்றரை மாதத்தில் திரும்பி வந்து கணவரின் தம்பியின் வீட்டில் மூன்று மாதங்களாக தங்கியிருந்தாள். எனது கணவரின் தம்பியின் மகன் தச்சிதானந்தத்துடன் காதல் என்று கேள்விப்பட்ட போது அவருக்கு புத்திமதி சொன்னோம்.
இருவரும் அடிக்கடி போன் கதைப்பார்கள். நான் ஏசுவேன். அக்காவும் தம்பியும் கதைப்பது போலவா கதைக்கிறீர்கள் என்று ஏசுவேன். தச்சிதானந்தம் தூக்கில் தொங்கி வைத்தியசாலைக்கு கொண்டு போகிறார்கள் என அறிந்தோம். அதனால் நாங்கள் குறிஞ்சாமுனைக்குச் சென்று மகளை வீட்டுக்கு கூட்டிவந்தோம். சம்பவதினம் காலை 9.00 மணியளவில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்ற போது வீட்டு வளையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டாள்" என்றார்.
மனோகரியின் தந்தை க.பாலசிங்கம் தனது சாட்சியத்தில் கூறியதாவது;
"குறிஞ்சாமுனையில் உள்ள எனது தம்பியின் மகன் தச்சிதானந்தம் தூக்கில் தொங்கி வைத்தியசாலைக்கு கொண்டுபோனார்கள். அதற்கு காரணம் எனது மகளும் தம்பியின் மகனும் ஒருவரை ஒருவர் காதலித்திருந்ததாகவும் தகவல் வெளியாகியது.
சம்பவ தினம் காலை 9.00 மணியளவில் வீட்டுக்கு சற்றுத் தொலைவில் கம்பு வெட்டிக் கொண்டிருக்கும்போது கத்தும் சத்தம் கேட்டது. ஓடிச்சென்று பார்த்தபோது மகள் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டாள்" என்றார். தூக்கில் தொங்கியதால் மிடர் இறுகி மூச்சுத் திணறி மரணம் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை செய்த மட்டு. போதனா வைத்தியசாலை டாக்டர் எச்.எம்.ஏ.எஸ்.தர்மசேன அறிக் கை
இவ்வாறு குறிஞ்சாமுனையைச் சேர்ந்த தா.தச்சிதானந்தம் (வயது 20) என்பவரின் மரண விசாரணையில் சாட்சியமளித்த அவரின் தாயாரான சிவலெட்சுமி கூறினார். காத்தான்குடி வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ச.கணேசதாஸினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட விசாரணையில் சாட்சி மேலும் கூறியதாவது;
"எனது மூத்த மகனை இனம் தெரியாதவர்கள் கடத்திச் சென்று பத்து வருடங்களாகின்றன. இரண்டாவது மகன் குடும்பப் பிணக்கு காரணமாக ஒரு வருடத்துக்கு முன்னர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான். ஒரு மகன் திருமணம் செய்துவிட்டான். கடைசி மூன்று பேரும் படிக்கிறார்கள்.
2016 ஆம் ஆண்டு ஆவணி மாதம் எனது கணவரின் அண்ணனின் மகள் மனோகரி அவருடைய அப்பா அம்மாவுடன் சண்டை பிடித்துவிட்டு வெளிநாடு செல்வதற்காக எமது வீட்டுக்கு வந்தாள். பின்னர் மரணமான எனது மகனையும் இவளையும் சேர்த்து பிழையாக ஊரில் கதை பரவத்தொடங்கியது. இப்படி ஊரெல்லாம் கதைக்கிறார்களே என்று மனோகரியிடம் கேட்டேன். அதற்கு அவர் சித்தி தச்சு எனது தம்பி. எங்களுக்குள் எந்த தப்பான எண்ணங்களும் இல்லை என்று சொன்னாள். நீ இனிமேல் எங்கள் வீட்டுக்கு வரவேண்டாம். வெளிநாடு போய்விட்டு வந்து உங்கட வீட்டுக்கே சென்று விடு என்று நான் சொல்லி அவளை அனுப்பிவிட்டோம்.
ஒன்றரை மாதங்களில் நாடு திரும்பி எங்கள் வீட்டுக்கே வந்தாள். உன்னையும் மகன் தச்சுவையும் பற்றி ஊரெல்லாம் பிழையாகக் கதைக்கிறார்கள். நீ வரவேண்டாம் என்று சொன்னபின் அவள் வருவதில்லை. ஆனால் மகனும் மனோகரியும் போனில் கதைப்பது தெரிந்தது. இருவருக்குமிடையே தகாத உறவு இருப்பதும் தெரியவந்தது.
மகனுக்கும் புத்திமதி சொன்னோம். எனது கணவரும் மகனும் உன்னிச்சையில் வாடியில் இருந்தனர். இடையிடையே வந்து சாமான் எடுத்துச் செல்வார்கள். இப்படியான நிலையில்தான் மகள் ரஞ்சிதா கோல் எடுத்து அண்ணாச்சி செத்துவிட்டான்" என்று சொன்னாள் என்றாள். இதேவேளை மரணமானதை அறிந்த எனது மகளும் தூக்கில் தொங்கி மரணமானாள் என இலுப்படிச்சேனை என்னும் இடத்தைச் சேர்ந்த பா.மனோகரி (வயது 27) என்பவரின் மரண விசாரணையில் சாட்சியமளித்த அவரின் தாயாரான மு.பூரணம்மா கூறினார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காத்தான்குடி வடக்கு திடீர் மரணவிசாரணை அதிகாரி ச.கணேசதாஸ் நடத்திய விசாரணையில் சாட்சி மேலும் கூறியதாவது;
"எங்களுக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள் மூன்று மகன்களும் ஒரு மகளும் திருமணம் செய்துவிட்டனர். இறந்த எனது மகள் இரண்டு தடவைகள் வெளிநாடு சென்று இரண்டு வருடங்கள் தொழில் செய்து விட்டு வந்தாள். கடைசியாக வெளிநாடு சென்றபின் எனது கணவரின் தம்பியின் மகன் தொலைபேசி மூலம் அவருடன் தொடர்பு கொண்டு வரச்சொன்னான். அதனால் ஒன்றரை மாதத்தில் திரும்பி வந்து கணவரின் தம்பியின் வீட்டில் மூன்று மாதங்களாக தங்கியிருந்தாள். எனது கணவரின் தம்பியின் மகன் தச்சிதானந்தத்துடன் காதல் என்று கேள்விப்பட்ட போது அவருக்கு புத்திமதி சொன்னோம்.
இருவரும் அடிக்கடி போன் கதைப்பார்கள். நான் ஏசுவேன். அக்காவும் தம்பியும் கதைப்பது போலவா கதைக்கிறீர்கள் என்று ஏசுவேன். தச்சிதானந்தம் தூக்கில் தொங்கி வைத்தியசாலைக்கு கொண்டு போகிறார்கள் என அறிந்தோம். அதனால் நாங்கள் குறிஞ்சாமுனைக்குச் சென்று மகளை வீட்டுக்கு கூட்டிவந்தோம். சம்பவதினம் காலை 9.00 மணியளவில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வீட்டினுள் சென்ற போது வீட்டு வளையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டாள்" என்றார்.
மனோகரியின் தந்தை க.பாலசிங்கம் தனது சாட்சியத்தில் கூறியதாவது;
"குறிஞ்சாமுனையில் உள்ள எனது தம்பியின் மகன் தச்சிதானந்தம் தூக்கில் தொங்கி வைத்தியசாலைக்கு கொண்டுபோனார்கள். அதற்கு காரணம் எனது மகளும் தம்பியின் மகனும் ஒருவரை ஒருவர் காதலித்திருந்ததாகவும் தகவல் வெளியாகியது.
சம்பவ தினம் காலை 9.00 மணியளவில் வீட்டுக்கு சற்றுத் தொலைவில் கம்பு வெட்டிக் கொண்டிருக்கும்போது கத்தும் சத்தம் கேட்டது. ஓடிச்சென்று பார்த்தபோது மகள் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டாள்" என்றார். தூக்கில் தொங்கியதால் மிடர் இறுகி மூச்சுத் திணறி மரணம் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை செய்த மட்டு. போதனா வைத்தியசாலை டாக்டர் எச்.எம்.ஏ.எஸ்.தர்மசேன அறிக் கை