மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்!

மட்டக்களப்பில்  இன்று 27 பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வியாபார நிலையங்கள் அனைத்தும் மூடியுள்ளதுடன், தினச்சந்தை, பஸ் நிலையம், பிரதான வீதிகள், வங்கிகள் அரச நிறுவனங்கள் பொது மக்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இ.போ. ச மற்றும் தனியார் பஸ்கள் வெளியூர் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீதிகளில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகின்றது. வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் பூரண ஹர்ததாலுக்கு பல தரப்பினரிடமிருந்தும் பூரண ஆதரவு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.