மண்முனை மேற்கு, பிரதேச கரவெட்டி சமுர்த்தி வங்கியின் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா

மண்முனை மேற்கு பிரதேசத்தின் கரவெட்டி சமுர்த்தி வங்கியினால் நடாத்தப்பட்ட சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை 23 ஆம் திகதி உன்னிச்சை பாடசாலை மைதானத்தில் வங்கி முகாமையாளர் எம்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரஆதச செயலாளர் எஸ்.சுதாகர், அதிசிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட வாழ்வின் எழுச்சி பணிப்பாளர் பி.குணரெட்ணம், சிறப்பு அதிதியாக உன்னிச்சை பிரதேச இராணுவப் பொறுப்பதிகாரி டி.றொட்றிக்கோ மற்றும் ஆயித்தியமலை பொலில் நிலைய பொறுப்பதிகாரி போன்றோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல விளையாட்டுக்களும் நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.