"சுற்றுச்சூழல் மற்றும் சுவாத்திய மாற்றங்கள்" என்னும் தொனிப்பொருளில் சர்வதேச புவி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையின் சூழலை பாதுகாக்கவும் எதிர்கால சமுதாயம் பாதுகாப்பான வகையில் வாழவும் ஏற்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நகர்வுகளும் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி சர்வதேச புவி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இம்முறை "சுற்றுச்சூழல் மற்றும் சுவாத்திய மாற்றங்கள்" எனும் தொனிப்பொருளில் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இலங்கையிலும் சர்வதேச புவி தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக வெப்பநிலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரது ஒத்து ழைப்பும் அவசியம் ஆகும். சுற்றுச்சூழல் வெப்பநிலை அதிகரிப்பு, சுவாத்திய மாற்றத்திற்கான பிரதான காரணமாகும். வெப்பநிலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த சகல துறைகளினதும் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.
21 ஆம் நூற்றாண்டின் சுவாத்திய மாற்றம் மனிதகுல அபிவிருத்திக்கு சவாலாக மாறியுள்ளது. சர்வதேச ரீதியாக ஆராய்கையில், சுவாத்திய மாற்றத்திற்கு வித்திடும் செயற்பாடுகளில் இலங்கையின் பங்களிப்பு வெகு குறைவாகும் என்று சுட்டிக்காட்டினார். எனினும் அதன் விளைவுகளிலிருந்து இலங்கை தப்பிக்க முடியாது. உலக வெப்ப நிலையை குறைப்பதற்கு இலங்கை கணிசமான பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளது.
இதற்காக மின்வலு, எரிசக்தி கைத்தொழில், போக்குவரத்துத் துறை போன்ற வற்றை சுற்றாடலுக்கு ஏற்ற விதத்தில் கட்டமைப்பது அவசியமாகும். இதற் கான கொள்கைகளை வகுப்பது முக்கியமானது. மக்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி சர்வதேச புவி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இம்முறை "சுற்றுச்சூழல் மற்றும் சுவாத்திய மாற்றங்கள்" எனும் தொனிப்பொருளில் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இலங்கையிலும் சர்வதேச புவி தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக வெப்பநிலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரது ஒத்து ழைப்பும் அவசியம் ஆகும். சுற்றுச்சூழல் வெப்பநிலை அதிகரிப்பு, சுவாத்திய மாற்றத்திற்கான பிரதான காரணமாகும். வெப்பநிலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த சகல துறைகளினதும் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.
21 ஆம் நூற்றாண்டின் சுவாத்திய மாற்றம் மனிதகுல அபிவிருத்திக்கு சவாலாக மாறியுள்ளது. சர்வதேச ரீதியாக ஆராய்கையில், சுவாத்திய மாற்றத்திற்கு வித்திடும் செயற்பாடுகளில் இலங்கையின் பங்களிப்பு வெகு குறைவாகும் என்று சுட்டிக்காட்டினார். எனினும் அதன் விளைவுகளிலிருந்து இலங்கை தப்பிக்க முடியாது. உலக வெப்ப நிலையை குறைப்பதற்கு இலங்கை கணிசமான பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளது.
இதற்காக மின்வலு, எரிசக்தி கைத்தொழில், போக்குவரத்துத் துறை போன்ற வற்றை சுற்றாடலுக்கு ஏற்ற விதத்தில் கட்டமைப்பது அவசியமாகும். இதற் கான கொள்கைகளை வகுப்பது முக்கியமானது. மக்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்றார்.