பட்டிருப்பு கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை, பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளருக்குக் கல்விச் சமூகத்தின் பாராட்டு


(கிருதஞ்ஞன்)

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ந. புள்ளநாயகம் அவர்களின் அர்ப்பணிப்பான சேவைக்கு பலன் கிடைத்துள்ளதாக கல்விச் சமூகம்  பாராட்டினைத் தெரிவித்துள்ளது. இந்த வகையில் எதிர்வரும் 04 ஆம் திகதி மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் மட்டக்களப்புச் சமூகம் இணைந்து வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களை பாராட்டுவதற்கான விழாவினை ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த.சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளின அடிப்படையில் பட்டிருப்பு கல்வி வலயம் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களின் அடைவு வீதம் எதிர்பாராத முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்த வகையில் 2011 ஆம் ஆண்டில் 40 வீதமாகக் காணப்பட்ட அடைவு வீதம் 2016 இல் 69 வீதமாக அபரீதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகின்றபோது 7 வீத வளர்ச்சினை காட்டிநிற்கின்றது.

 கடந்த கால வன்செயலின்போது கல்வியின் வளர்ச்சி படுமோசமான நிலையிலும். மெதுவான வளர்ச்சிப் போக்கிலும் காணப்பட்டது. தற்பொழுது இவ் அடைவுமட்டம் இரட்டிப்பு நிலையில் காணப்படுகின்றது. இந் நிலை எதிர்கால கல்வி வளர்ச்சியின் சிறந்த சுட்டியாக காணப்படுவதற்கான வாய்ப்புக்களை பெற்றுள்ளமையை குறிப்பிடமுடியும்.