களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவில் முழுமையான கதவடைப்பு. மக்கள் பூரண ஒத்துழைப்பு.

   (ரவிப்ரியா)
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்கக் கோரி வடக்கு கிழக்கில்இன்று வியாழக்கிழமை (27) நடாத்தப்பட்ட ஹர்த்தாலுக்கு தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் வர்த்தகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி கதவடைப்புச் செய்தனர். இதனால்
களுவாஞ்சிக்குடி. பட்டிருப்பு. மாங்காடு, தேற்றாத்தீவு, செட்டிபாளையம். குருக்கள்மடம், களுதாவளை, ஓந்தாச்சிமடம். கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு  பொது மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தைகளும் கூடவில்லை. வங்கிகளும் முழுமையாகச் செயற்படவில்லை. இலங்கை போக்குவரத்தச் சபையின் பஸ் வண்டிகள் சில சேவையில் ஈடுபடுத்தப்படடிருந்தபோதும் பிரயாணிகள் குறைந்தளவிலேயே காணப்பட்டனர். பிரதேச செயலகம் வழமைபோல் இயங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது.

பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மாணவர்கள் இன்றி வகுப்பறைகள் வெறிச்சோடிக்கிடந்தது. அதிபர் ஆசிரியர்கள் சமுகமளித்திருந்தனர். கல்முனை மருதமுனைப் பிரதேசங்களிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்படிருந்தன. வங்கிச் சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பொதுவாக வீதிகளும் வெறிச்சோடியே காணப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் மிகக் குறைந்தளவிலேயே காணப்பட்டது.
                                      .