லண்டனைச் சேர்ந்த அரங்கம் அமைப்பினால் ஊடக கருத்தரங்கு

லண்டனைச் சேர்ந்த அரங்கம் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் காயமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்காக ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி ஊடக கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புடன் இணைந்து இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.
அரங்கம் அமைப்பின் உறுப்பினர் பரமேஸ்வரி சீவகனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கை மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் அதிகாரி அருள்மொழி சாரங்கபாணி ஒருங்கிணைத்திருந்தார்,

மட்டக்களப்பு வர்த்தகர் சங்கத்தை சேர்ந்த தொழில் அதிபர்களான ரஞ்சிதமூர்த்தி, செல்வராஜா மற்றும் மொபிட்டல் நிறுவனத்தின் தங்கையா தர்மேந்திரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் சிவலிங்கம் பரமானந்தம்(ஒளியன்) அவர்களும் அங்கு சமூகமளித்திருந்தார்.

தினகரன் பத்திரிகை ஆசிரியர் குணராஜா, செய்தியாளர் கருணாகரன், நோர்வேயை சேர்ந்த புகைப்படச் செய்தியாளர் தமயந்தி, பேராசிரியர் யோகராசா, விரிவுரையாளர் சிவரட்ணம் மற்றும் ஆய்வாளர் விஜய் எட்வின் ஆகியோர் வளவாளர்களாக கருத்தரங்கை நடத்தினார்கள்.