மட்டு மாநகர சபையினால் கிராமப்புற பாடசாலைகளுக்கு கொப்பிகள் வழங்கி வைப்பு

சுவாமி விபுலாநந்தரின் 125 ஆவது பிறந்நதினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் கிராமப்புறப் பாடசாலைகளுக்கு கொப்பிகள் வழங்கி வைக்கப்படும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்-பிள்ளையபரடி நல்லையா வித்தியாலயம், புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம் மற்றும் திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன. 

இவ்வைபவங்களின் போது மாநகர ஆணையாளர் வெ.தவராஜா மற்றும் பிரதி ஆணையாளர் ந.தனஞ்ஜெயன் ஆகியோர் வரவேற்கப்படுவதையும் கொப்பிகளை மாணவர்களுக்கு வழங்கி வைப்பதையும் கலந்து கொண்ட மாநகர உத்தியோகத்தர் ச.சந்திரகுமார் மற்றும் அதிபர், மாணவர்களையும் படங்களில் காணலாம்